24 671ca9fc86de5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கும் ஹரினிக்கும் இடையில் முரண்பாடு! உண்மையை கூறும் பிரதமர்

Share

ஜனாதிபதி அநுரவுக்கும் ஹரினிக்கும் இடையில் முரண்பாடு! உண்மையை கூறும் பிரதமர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என பிரதமர் ஹரிணி அமசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அத்திடிய பொலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான செய்தி பொய்யான ஒன்று.

எமக்கு இடையில் போட்டி இல்லை எனவும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் எப்போது முடிவுக்கு வரும் எனவும் பிரதமர் மேலும் கேள்வி எழுப்பினார்.

அச்சம் இல்லாத வகையில் இந்த நாடு நிச்சயம் கட்டியெழுப்பப்படும் என பிரதமர் மக்களிடம் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மூன்று சதவீதமாக இருந்த போதிலும், நாங்கள் இந்தப் போராட்டத்தை கைவிடவில்லை.

அன்று சிரித்தவர்கள் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஓடிவிட்டனர் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....