இலங்கைசெய்திகள்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

Share
24 671cda5d458de
Share

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் – அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தால் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார் என்றுதான் கூற வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டில் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது நகைப்புக்குரியது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பொய்யான அறிக்கைகளுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் (14) நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

நவம்பர் 14இற்குப் பிறகு நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய மக்கள் சக்தி 25 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்களைக் கொண்ட வலுவான அரசாங்கத்தை நியமிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...