22 16
இலங்கைசெய்திகள்

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

Share

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

அறுகம்பையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வெலிகம மாநகர முதல்வரும் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

அறுகம்பையில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பின்மை தொடர்பில் கொழும்பின் தூதரகங்கள் வெளியிட்ட எச்சரிக்கையை அடுத்தே இந்த விடயத்தை ரெஹான் ஜயவிக்கிரம வெளியிட்டுள்ளார்.

 

அறுகம்பையில் சில இஸ்ரேலிய வணிக உரிமையாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நியாயத்தை உறுதி செய்யுமாறு பல்வேறு அரசாங்கங்களுக்கு பல முறையீடுகள் செய்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரெஹான் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலைமையை, அவசரமாகத் தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இலங்கைக்கான விளைவுகள் நாம் எதிர்பார்ப்பதை விட மிகக் கடுமையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தநிலையில், இஸ்ரேலியர்களை வலியுறுத்துவதாக கூறி கோரிக்கை ஒன்றையும் அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

“நீங்கள் வேறு இடங்களில் செய்தது போல் எங்கள் நிலங்களை வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்கிரமிக்க முடியாது. நீங்கள் சட்டவிரோத வணிக நடைமுறைகளை நடத்த முடியாது மற்றும் மற்றவர்களுக்கு வாய்ப்புகளை அழிக்க முடியாது. இந்த அழகான தீவுக்கு நாங்கள் உங்களை வரவேற்றிருந்தாலும், இது உங்கள் நாடு அல்ல, நீங்கள் இந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, அறுகம்பையில் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ ஹீப்ரூ மொழியிலும் பல கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...