22 16
இலங்கைசெய்திகள்

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

Share

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

அறுகம்பையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வெலிகம மாநகர முதல்வரும் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

அறுகம்பையில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பின்மை தொடர்பில் கொழும்பின் தூதரகங்கள் வெளியிட்ட எச்சரிக்கையை அடுத்தே இந்த விடயத்தை ரெஹான் ஜயவிக்கிரம வெளியிட்டுள்ளார்.

 

அறுகம்பையில் சில இஸ்ரேலிய வணிக உரிமையாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நியாயத்தை உறுதி செய்யுமாறு பல்வேறு அரசாங்கங்களுக்கு பல முறையீடுகள் செய்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரெஹான் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலைமையை, அவசரமாகத் தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இலங்கைக்கான விளைவுகள் நாம் எதிர்பார்ப்பதை விட மிகக் கடுமையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தநிலையில், இஸ்ரேலியர்களை வலியுறுத்துவதாக கூறி கோரிக்கை ஒன்றையும் அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

“நீங்கள் வேறு இடங்களில் செய்தது போல் எங்கள் நிலங்களை வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்கிரமிக்க முடியாது. நீங்கள் சட்டவிரோத வணிக நடைமுறைகளை நடத்த முடியாது மற்றும் மற்றவர்களுக்கு வாய்ப்புகளை அழிக்க முடியாது. இந்த அழகான தீவுக்கு நாங்கள் உங்களை வரவேற்றிருந்தாலும், இது உங்கள் நாடு அல்ல, நீங்கள் இந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, அறுகம்பையில் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ ஹீப்ரூ மொழியிலும் பல கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...