1 45
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசுக்கு ரணில் விடுத்த சவால்

Share

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசுக்கு ரணில் விடுத்த சவால்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

 

அரச ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “அரச ஊழியர் சம்பள உயர்வை வழங்க வேண்டும், அந்த சம்பள உயர்வை கொடுக்கலாம், உரிய பரிசீலனைக்கு பிறகே இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்த்தோம்.

 

அடுத்த ஆண்டுக்குள் நமது அரசாங்க வருவாய் பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து பதின் மூன்று சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும், அதன்படி இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

 

உரிய சம்பள உயர்வை வழங்க பணம் உள்ளது, பணம் இல்லை என்று சொன்னால் அது ஒரு விசித்திரக் கதை. சம்பள உயர்வுக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை அரசு விளக்க வேண்டும்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....