1 45
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசுக்கு ரணில் விடுத்த சவால்

Share

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசுக்கு ரணில் விடுத்த சவால்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

 

அரச ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “அரச ஊழியர் சம்பள உயர்வை வழங்க வேண்டும், அந்த சம்பள உயர்வை கொடுக்கலாம், உரிய பரிசீலனைக்கு பிறகே இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்த்தோம்.

 

அடுத்த ஆண்டுக்குள் நமது அரசாங்க வருவாய் பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து பதின் மூன்று சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும், அதன்படி இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

 

உரிய சம்பள உயர்வை வழங்க பணம் உள்ளது, பணம் இல்லை என்று சொன்னால் அது ஒரு விசித்திரக் கதை. சம்பள உயர்வுக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை அரசு விளக்க வேண்டும்.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...