10 28
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

Share

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் லுனுகம்வெஹர பிரதேசத்தில் வசித்த 28 வயதுடைய சந்தமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

வீட்டின் வரவேற்பறையில் ஜன்னல் துணியை பொருத்துவதற்காக ஆணியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது குழந்தை ஆணியை எடுத்து வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின் இணைப்பில் செருகியுள்ளது.

 

இதைப் பார்த்த மூத்த பிள்ளை கத்தி கூச்சலிட்டது. உடனடியாக தாயாரும் அலறியடித்தபடி சிறு குழந்தையின் அருகில் சென்று குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

 

பிளக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆணியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்ததால், தாயை காப்பாற்றுமாறு இரண்டு பிள்ளைகளும் கூச்சலிட்டனர்.

 

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய பெண் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த பெண்ணின் கணவர் கொழும்பில் பணிபுரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...