Connect with us

இலங்கை

களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு விவகாரம் : நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை

Published

on

16 20

களனி பல்கலைக்கழகத்தில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தில் நான்காம் ஆண்டில் கணக்கியல் கற்கை நெறியில் கல்வி கற்கும் பிரின்ஸ் ராஜு பண்டார என்ற 24 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பணிப்பாளரிடம் இருந்து விசாரணை அறிக்கை வரவழைக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை இன்று (24) பெறப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பிபில பிரதேசத்தில் வசிக்கும் இம்மாணவனின் குடும்பத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருவதாகவும், விடுதியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய, மாணவனின் மரணம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

இந்த மாணவர் பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரா மாணவர் விடுதியின் 416ஆம் இலக்க அறையில் அவர் தங்கியிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கமைய, களனி பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.கே. தேவப்பிரியவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம இன்ஸ்பெக்டர் ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை, உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே உயர்தர பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக ஆசிரியராக பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்10 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 24 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 24.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 7, வியாழக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் கேட்டை, மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 23 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 23 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 6, புதன் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 22 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 22 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 5, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 21 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 21 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 21.10.2024 குரோதி வருடம் ஐப்பசி 4, திங்கட் கிழமை, சந்திரன் ரிஷப...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 20 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 20 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 20.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 3 ஞாயிற்று கிழமை, சந்திரன் ரிஷப...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 19 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 19 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 19.10. 2024, குரோதி வருடம் ஐப்பசி 2, சனிக் கிழமை, சந்திரன்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 18 அக்டோபர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 18, 2024 வெள்ளிக் கிழமை) இன்று...