25 15
இலங்கைசெய்திகள்

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

Share

விசேட பகுதிகளில் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசேட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு சபைக்கூட்டம் இடம்பெற்றபோதே, இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர், பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று (23.10.2024) இடம்பெற்ற நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஒக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாத குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரியந்த விஜேசூரிய கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...