26 14
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

Share

வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்குவிற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி கரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான ஒருவகை பாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

குறித்த வியாபார நிலையங்களிற்கு வருகை தரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளை அண்டி நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

பிரதான வீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள் சென்று வருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு பாக்கினை கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகனநெரிசல் ஏற்ப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்து சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

எனவே, குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, அந்த பாக்குவிற்பனை நிலையங்களில் ஒருவகை போதைப்பாக்கு விற்பனையும் இடம்பெறுவதாகவும் தெரிவித்து கடந்த காலங்களில் வவுனியா பொலிஸாரால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...