28 13
இலங்கைசெய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி: பெற்றோர் வெளியிட்ட தகவல்

Share

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி: பெற்றோர் வெளியிட்ட தகவல்

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து பரப்பப்படும் பொய்யான தகவல் குறித்து அவரது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாணவியின் மரணம் குறித்து வெளியான செய்திகளில் தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீடியோ கேம்களில் ஈடுபடுவது, பெற்றோரின் அழுத்தம், துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவது என பல பொய்யான காரணங்களை மகள் மீது சுமத்தியுள்ளனர்.

இதன்மூலம் மகளின் மரணம் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 2ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் நெருங்கிய தோழி எனவும் தெரிவித்துள்ளனர்.

இவரின் நெருங்கிய நண்பியும், நண்பரும் உயிரிழந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது கடுமையான மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரை மீட்டு சரியான பாதைக்கு கொண்டு வர நிபுணர்களின் உதவியைப் பெற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவி குணமடைந்து வரும் வேளையில் தனது பாடசாலையில் சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரப்பிய பொய்யான வதந்திகளினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தங்கள் மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், மற்ற மாணவர்களை தங்கள் மகளிடம் இருந்து ஒதுக்கிவைக்குமாறும் சில பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான பெற்றோர்களின் வதந்திகளாலும், அழுத்தங்களாலும் தனது மகள் மிகவும் வேதனையில் பொழுதை கழித்ததாகவும் இதன் காரணமாகவே அவரை வேறு பாடசாலைக்கு மாற்ற நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவளின் மீதான அழுத்தங்கள் அவளால் தாங்க முடியாத நிலையை எட்டி,மரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...