2 27
இலங்கைசெய்திகள்

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Share

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

நீண்ட காலமாக அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் சுமார் 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் கடமைகள் தொடர்பான மீள் பயிற்சிகளை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர்களின் பாதுகாப்புப்பிரிவில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான அதிகாரிகள் அமைச்சர் அல்லது எம்.பிக்களின் தனிப்பட்ட விடயங்களை கடமைக்கு மேலதிகமாக செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர்களின் வீடுகளிலும், அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்காகவும் நீண்ட நாட்களாக பொலிஸ் பணியை செய்யாமல் பணிபுரிந்து வருவதால், குறித்த அதிகாரிகளுக்கு பொலிஸ் பணிகள் குறித்த தெளிவு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு, பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றில் கடமையாற்றிய பெருமளவிலான அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, பொலிஸ் நிலையங்களின் பணிகளில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் கடமைகளில் மீள் பயிற்சி வழங்குவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...