2 22
இலங்கைசெய்திகள்

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் பாதுகாப்பு – அநுர அரசின் மாற்றம்

Share

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் பாதுகாப்பு – அநுர அரசின் மாற்றம்

எதிர்வரும் தேர்தலின் பின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளனர்.

அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களை மாத்திரம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மாத்திரம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...

25 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகம் இனி QR முறை மூலம் மட்டுமே: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முழுமையாக முறைப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ‘தேசிய எரிபொருள்...

24 11
செய்திகள்அரசியல்இலங்கை

கே.பி.யின் கைது மற்றும் மகிந்த-கோட்டாபயவின் டீல்: சரத் பொன்சேகாவின் பகிரங்க விமர்சனம்!

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான...