19 13
இலங்கைசெய்திகள்

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

Share

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் மட்டுமே ஊடுருவல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளில் ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், பலரின் தனிப்பட்ட கணக்குகளில் ஊடுருவல் செய்து, பல மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தநிலையில்; மோசடியால் சிக்கிக்கொள்ளும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின்போது, வங்கிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர், கைப்பேசிகள் மற்றும் 250 மடிக்கணணிகளை கைப்பற்றி சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் விருந்தகங்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக கூறிய அவர், தங்களுடைய வளாகத்தை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வளாகங்களில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...