19 13
இலங்கைசெய்திகள்

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

Share

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் மட்டுமே ஊடுருவல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளில் ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், பலரின் தனிப்பட்ட கணக்குகளில் ஊடுருவல் செய்து, பல மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தநிலையில்; மோசடியால் சிக்கிக்கொள்ளும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின்போது, வங்கிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர், கைப்பேசிகள் மற்றும் 250 மடிக்கணணிகளை கைப்பற்றி சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் விருந்தகங்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக கூறிய அவர், தங்களுடைய வளாகத்தை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வளாகங்களில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...