13 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

Share

கடவுச்சீட்டு வரிசைக்கு பதிலாக பொலிஸார் புதிய நடைமுறை

முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிபாரிசு பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான இலக்கமொன்று வழங்கப்படுகின்றது.

எனினும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவி இலச்சினையை போலியாகத் தயாரித்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போதைக்கு புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாரின் தலையீடு அநாவசியமானது என்றும் விண்ணப்பதாரிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் புதிய நடைமுறையின் பிரகாரம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலும் இரண்டு இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...