23 8
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு விமான சேவையில் புதிய திட்டங்களுடன் தயாராகும் சினமன் எயார்

Share

உள்நாட்டு விமான சேவையில் புதிய திட்டங்களுடன் தயாராகும் சினமன் எயார்

இலங்கையின் உள்நாட்டு விமான சேவையான சினமன் எயார், கண்டி மற்றும் சிகிரியா தொடக்கம் தென் கரையோர பிரதேசங்களான, கொக்கல மற்றும் ஹம்பாந்தோட்டையுடன் இணைக்கும் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

இரண்டு புதிய தினசரி திட்டமிடப்பட்ட விமான சேவைகளை குறித்த நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சேவையில் செஸ்னா 208 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் நவம்பரில் இருந்நு இந்த விமானசேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானங்கள் 2024 நவம்பர் 01 இல் இருந்து 2025 ஏப்ரல் 30ஆம் வரை செயற்படவுள்ளன.

குளிர்கால விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாசார முக்கோணம் அல்லது மத்திய மலை நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் இலங்கையின் தென் கரையோரத்தை பார்க்க விரும்புவோருக்கு, பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்த உள்நாட்டு விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள், தண்ணீரில் இருந்து புறப்படுவதை உள்ளடக்கிய தனித்துவமான பயண அனுபவத்தையும் வழங்குவதாக சினமன் எயார் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...