இலங்கைசெய்திகள்

தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி

Share
30 5
Share

தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் நேற்று (12) தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் இளம் சட்டத்தரணியான செல்வரஜா டினேசன் இம்முறை இடம்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் மன்னாரில் இருந்து போட்டியிடுகின்றார்.

இம்முறை, மாற்றம் ஒன்றையும் இளம் வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என பலரது கோரிக்கைகளுக்கும் அமைவாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளடங்களாக சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நேற்றைய தினம் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

இவருக்கு மன்னார் மாவட்டத்தில் இளைஞர் குழுக்கள் அமோக ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...