5 13
இலங்கைசெய்திகள்

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

Share

மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...