24 6
இலங்கைசெய்திகள்

குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் மரணம்

Share

குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் மரணம்

முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...