23 4
இலங்கைசெய்திகள்

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

Share

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன்‌ ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

கட்சியின் வேட்பாளர்களாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் பல பிரபலங்கள் கட்சிக்குள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...