29 1
இலங்கைசெய்திகள்

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

Share

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபாவை விடவும் குறைந்தால் அது முட்டை கைத்தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித் தீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோழித் தீனியின் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் முட்டை ஒன்றின் விலையை 29 முதல் 30 ரூபா அளவில் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 32 முதல் 33 ரூபா செலவாகின்றது எனவும் இதில் அதிகளவு தொகை கோழி தீனி வகைகளுக்காக செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித்தீனியின் விலைகள் சோளத்தின் விலையில் கூடுதலாக தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...