இலங்கைசெய்திகள்

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண்

Share
23 1
Share

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண்

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo) விளையாட்டிலும் பதக்கத்தினை பெற்று இரணைப்பாலை கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

படிப்பிற்கு விளையாட்டு சம நேரத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இரண்டிலும் சாதனை படைக்கலாம் எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், தனது வெற்றிக்கு துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

அத்துடன், குறித்த மாணவி வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

குறித்த மாணவியின் தந்தை இது தொடர்பாக கூறும்போது,

“விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் படிப்பு பின்தங்கிவிடுமோ என பயமாகவே இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் எனது மகள் விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.

அத்துடன், எனது மகளின் எதிர்கால இலக்கினை அடைய எனது முழு ஆதரவு இருக்கும்” என கூறியிருந்தார்.

கடந்த மாதம் 28,29,30 ஆகிய திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...