1 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

Share

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக இல்லாமல் ஜனாதிபதியாகவே எரிபொருள் விலை திருத்தத்தை அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) செய்ததாக இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரொலியம் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் இன்று (1) பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டி. ஜே. ராஜகருணா அதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விலையை குறைக்கும் தீர்மானம் நாட்டை மையப்படுத்தியே ஜனாதிபதியால் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கான எரிபொருளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை முன்பதிவு (oder) செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்பட்ட எரிபொருள் கடந்த மாத அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் படி, பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...