15 30
இலங்கைசெய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

Share

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

செலவிடப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றம் குறித்து விளையாட்டு அமைச்சு விரைவான கணக்காய்வு நடத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் இருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து முறையான தணிக்கை தேவை என்றும், உள்ளக கணக்காய்வு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு என்ற வகையில், பொது நிதி விரயம் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால், பண்டிகைகளுக்கு விரயமாவதை குறைக்க அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...