15 19
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு

Share

கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பொதுக்கூட்டங்களை சுமூகமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பேரணிகள் காரணமாக சில வீதிகள் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

அந்தவகையில் கொழும்பு மாவட்ட கிராண்ட்பாஸில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதிப் பேரணி காரணமாக கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் நெரிசல் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதானையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச தனது இறுதிப் பேரணியை நடத்துவதால் மருதானையைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

நுகேகொடயில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பேரணி நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.

பிலியந்தலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இறுதிக் கூட்டத்தில் பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் பாதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பயண வழிகளை அதற்கேற்ப திட்டமிட்டு, முடிந்தவரையில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...