3 25
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 09 பேர் பாதுகாப்பு கோரவில்லை எனவும், 04 பேர் பாதுகாப்பு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கை அலுவலகங்களில் அறிக்கைகள் பெற்று அவசியமான பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அல்லது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் கடைசி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், அந்த இடங்கள் தொடர்பில் உளவுத்துறை அறிக்கைகள் பெறப்படும்.

கூட்டத்திற்கு சில மணி நேரம் முன்னதாக, தேவையான பாதுகாப்பை அளித்து கூட்டம் முடிந்த பின் அறிக்கைகள் பெறப்படும்.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...