4 19
இலங்கைசெய்திகள்

தெரிவு செய்யப்படவிருக்கும் அரசாங்கம் தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கருத்து

Share

தெரிவு செய்யப்படவிருக்கும் அரசாங்கம் தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கருத்து

மக்களினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியதம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பிலான மூன்றாவது மீளாய்வு நடவடிக்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜுலி கொஸாக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் எதிர்நோக்கிய மிக மோசமான நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான முயற்சியில் வென்றெடுக்கப்பட்ட விடயங்களை இலங்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு வரையறுக்கப்பட்டது எனவும், அரசாங்கத்திற்கும் கடன் கொடுனர்களுக்கும் இடையிலேயே பிரதான இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...