2 18
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் 10 நாட்களுக்கு போலிச்செய்தி அலை வீசும்

Share

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் 10 நாட்களுக்கு போலிச்செய்தி அலை வீசும்

பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் தமது கட்சி அரசாங்கத்தைக் கைவிடும் என்று கூறப்படும் கருத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார நிராகரித்துள்ளார்.

“முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று சொன்னார்கள். தற்போது எங்கள் அரசாங்கம் ஆறு மாதங்கள் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்” என்று நேற்று குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமது தலைமையில் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பத்து நாட்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான செய்திகள் அலை வீசும் என்றும், இருந்த போதிலும், தேசிய மக்கள் சக்தி வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் “எங்கள் எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர். எமக்கு எதிரான பாரிய சதித்திட்டம் தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று அனுரகுமார கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...