2 13
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

Share

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாறியுள்ளார் எனவும் இந்தக் கூட்டணி தன்னைப் பார்த்து அஞ்சுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவயில் (Kolonnawa) நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” ரணில் மற்றும் அநுரவுக்கு (Anura Kumara Dissanayake ) இடையிலான புதிய ஒப்பந்த திரைப்படம் மக்கள் மத்தியில் இன்று திரையிடப்படுகிறது.

ரணிலுக்கு ஏதேனும் வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டு மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சேவையாற்றும் என்ற அச்சம் ரணில் மற்றும் அநுர கூட்டணியில் காணப்படுகிறது. எனவே, இத்தகைய டீல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து, சிறந்த கொள்கையுடனான அரசியல் கலாச்சாரத்தை ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையினால் செல்வந்தர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். எனவே, எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர், மக்களின் சுமைகளைக் குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கை எட்டப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...