1 9
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

Share

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது பொருளாதார வீழ்ச்சிக்குத் திரும்பும் அபாயத்துக்கு செல்வதா என்பதைத் தீர்மானிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏனைய தலைவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார்.

தாம் வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைகளை உருவாக்குதல், வரிச் சுமையைக் குறைத்தல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரியம் மற்றும் அமைதி முயற்சிகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....