அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

1 9
Share

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது பொருளாதார வீழ்ச்சிக்குத் திரும்பும் அபாயத்துக்கு செல்வதா என்பதைத் தீர்மானிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏனைய தலைவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றும் ரணில் கூறியுள்ளார்.

தாம் வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைகளை உருவாக்குதல், வரிச் சுமையைக் குறைத்தல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரியம் மற்றும் அமைதி முயற்சிகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...