17 3
இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா

Share

சிறுவர்களுக்கு எதிரான இணையக்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு உதவும் அவுஸ்திரேலியா

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர்.

இலங்கை (Sri Lanka) பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய (Australia) குயின்ஸ்லாந்தின் சிறுவர் சுரண்டல் எதிர்ப்புக் குழுவின் விசாரணையாளர்களை இது தொடர்பில் சந்தித்துள்ளனர்.

இணையங்களில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து எதிர்த்துப் போராடுவதில், இலங்கை பொலிஸின் சர்வதேச வலையமைப்பு முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் பிரதிப் பரிசோதகர் ரேணுகா ஜெயசுந்தர மற்றும் பொறுப்பதிகாரி காண்டீபன் சிறிவராஜ் ஆகியோர் அவுஸ்திரேலிய விஜயத்தில் இணைந்திருந்தனர்.

அவர்கள் இருவரும், புலனாய்வு அதிகாரிகளையும் சந்தித்தனர்.

இந்தநிலையில், தமது விஜயம் விலைமதிப்பற்றது என பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...