Connect with us

இலங்கை

இலங்கை குறித்து உறுப்பு நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

Published

on

25 3

இலங்கை குறித்து உறுப்பு நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பிலும், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரானது ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு ஒத்துழைக்குமாறு, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி செயன்முறைகள், உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட, இலங்கையில் உள்நாட்டு போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஏனைய சர்வதேச சட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதையும் பரிசீலிக்குமாறும் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கைப்பிரஜைகள் தொடர்பான புகலிட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யவும், பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களை பாதுகாப்பதற்காகவும், சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு உண்மையான ஆபத்தை முன்வைக்கும் வழக்குகளின் மறுபரிசீலனைகளிலிருந்து விலகியிருக்கவும் உறுப்பு நாடுகளை, மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் அலுவலகம், தமது கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உட்பட்ட தமது பணிகளை தொடர ஆதரவையும் கோரியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வின் ஆரம்ப நாளில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி, பேரவையின் 57அவது அமர்வு தொடங்கவுள்ளது.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் குறித்த அறிக்கை, சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம், கடக ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2024, குரோதி வருடம் ஆவணி 27, வியாழக்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8, 2024, குரோதி வருடம் ஆவணி 23, ஞாயிற்று...