25 3
இலங்கைசெய்திகள்

இலங்கை குறித்து உறுப்பு நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

இலங்கை குறித்து உறுப்பு நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பிலும், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரானது ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு ஒத்துழைக்குமாறு, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை கோரியுள்ளது.

மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி செயன்முறைகள், உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட, இலங்கையில் உள்நாட்டு போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஏனைய சர்வதேச சட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதையும் பரிசீலிக்குமாறும் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கைப்பிரஜைகள் தொடர்பான புகலிட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யவும், பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களை பாதுகாப்பதற்காகவும், சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு உண்மையான ஆபத்தை முன்வைக்கும் வழக்குகளின் மறுபரிசீலனைகளிலிருந்து விலகியிருக்கவும் உறுப்பு நாடுகளை, மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் அலுவலகம், தமது கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உட்பட்ட தமது பணிகளை தொடர ஆதரவையும் கோரியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வின் ஆரம்ப நாளில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி, பேரவையின் 57அவது அமர்வு தொடங்கவுள்ளது.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் குறித்த அறிக்கை, சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...