18 26
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – திடமான நம்பிக்கையில் மகிந்த தரப்பு

Share

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – திடமான நம்பிக்கையில் மகிந்த தரப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

35 சதவீதமான மக்கள் நிச்சயமாக “மகிந்த சிந்தனை” கொள்கையுடன் இருப்பார்கள் எனவும் அதற்கமைய, நாமல் ராஜபக்ஷவுக்கு அந்தளவு வாக்குகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இத்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது. 35 வீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச நான்கு சதவீத வாக்குகளை பெறுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...