1 49
இலங்கைசெய்திகள்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

Share

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

எதிர்கட்சி அரசியல்வாதிகளான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை (Ajit Doval) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க. அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்சவுடனும், அஜித் தோவால், பரஸ்பர பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...