14 23
இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Share

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும், கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும், தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டமும், உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும், தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும் வடக்கு மாகாணமும், பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல பகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஸாந்த டியுடர், தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டததரணி டொனால்ட் பெரேரா ஆகியோர் கட்சித் தலைமையகத்திலிருந்து மாவட்ட இணைப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...