4 39
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு..! கணிக்க முடியாத நிலை

Share

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு..! கணிக்க முடியாத நிலை

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தற்போதைய பிரசாரங்கள் மற்றும் சனக்கூட்டங்களை வைத்து, கணிக்கமுடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), சஜித் பிரேமதாச(Sajith Premadasa) மற்றும் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) ஆகிய மூன்று வலிமைமிக்க வேட்பாளர்களின் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவும்(Namal Rajapaksa) பேரணிகளில் கூட்டத்தை வரழைக்க முயற்சிக்கிறார்.

எனினும் முன்னைய தேர்தல்களைப் போலன்றி, கூட்டத்தின் எண்ணிக்கை வெற்றியாளரின் ஒரே குறிகாட்டியாக இருக்காது என்றே அரசியல் தரப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை வாக்காளர்கள் முன்னரைப் போலன்றி, இப்போது அரசியல் ரீதியில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர்.

வாக்காளர்களில் பெரும்பாலானோர் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னும் சந்தேகத்தை கொண்டுள்ளனர்

எனவே செப்டம்பர் 20 ஆம் திகதி வரை அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கமாட்டார்கள் என்றும் அரசியல் தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...