19 19
இலங்கைசெய்திகள்

வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படவுள்ள குறுந்தகவல்கள்

Share

வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படவுள்ள குறுந்தகவல்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையான முறையில் நியாயமான வரியை வசூலிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் செலுத்தப்படும் வரிகள் மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பொறுப்பேற்ற இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.

மக்களும் வர்த்தகர்களும் வரி செலுத்த விரும்புவதாகவும், எனினும் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

அத்துடன் வரி செலுத்தும் போது, மக்கள் அதன் பலனைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...