28 15
இலங்கைசெய்திகள்

ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்

Share

ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்

2022இல் மின்சார நெருக்கடிக்கு 2015 சிறிசேன – ரணில் அரசாங்கமே காரணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa ) குற்றம் சுமத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு உமா ஓயா திட்டத்தையும், சம்பூர் மின்சார திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், 2022ஆம் ஆண்டு இலங்கையில் மின்சார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று தேர்தல் பேரணியில் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கமே, உமா ஓயா மற்றும் சம்பூர் மின்சாரத் திட்டங்களை இடைநிறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே 2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கையில் மின்சார நெருக்கடி நிலை ஏற்பட்டதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...