இலங்கைசெய்திகள்

யாழில் மதுபோதையில் பொதுமகனை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

25 14
Share

யாழில் மதுபோதையில் பொதுமகனை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியால் சென்ற நபரை இடைமறித்து அவருடன் முரண்பட்டு, தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....