25 14
இலங்கைசெய்திகள்

யாழில் மதுபோதையில் பொதுமகனை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

Share

யாழில் மதுபோதையில் பொதுமகனை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியால் சென்ற நபரை இடைமறித்து அவருடன் முரண்பட்டு, தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...