24 66c968223670c
இலங்கை

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Share

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான வழக்கு அண்மையில் இடம்பெற்றது.அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, நீதிமன்றின் இந்த தீர்ப்பு குறித்து அடுத்த வாரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க ( R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

சில வேட்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பல வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3,000 அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...