14 18
இலங்கைசெய்திகள்

அனுர ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்கமாட்டோம்: விஜித ஹேரத் உறுதி

Share

அனுர ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்கமாட்டோம்: விஜித ஹேரத் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்க மாட்டோம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடையும் எந்தவொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியதன் பின்னர் எதிரிகள் தாக்கப்படுவார்கள் எனவும், எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் சிலர் பிரசாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவ்வாறான எந்தவொரு பழிவாங்கல் செயற்பாடுகளும் இடம்பெறாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மிகவும் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மிகவும் அமைதியான முறையில் நாம் எமது வெற்றியைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

போட்டி ஆரம்பிக்கும் போது கைலாகு செய்தோம் போட்டியின் நிறைவிலும் எமது வெற்றியுடன் கைலாகு செய்வோம் என விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...