21 11
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு!

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்டிருந்ததன் பிரகாரம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றினால் வழங்கப்பட உள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் ஒன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி உள்ளிட்ட நான்கு தரப்புக்களினால் இது தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான விஜித் கே மலலால்கொட, மதுர் பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்களினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர், அமைச்சரவை, தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....