3 30 scaled
இலங்கை

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

Share

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

எனினும் இந்த சின்னத்திற்கு களுத்துறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்று உரிமை கோரியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் நான்கு உள்ளுராட்சி சபைகளுக்காக, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்றுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

தமது சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படக்கூடாது எனக்கூறி குறித்த சுயாதீன குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பனவற்றுக்கு தனித்தனியாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனவே எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் பிரச்சினைகள் எழாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் மாறுபடும் எனவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் சர்ச்சை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் குழுவொன்று தெரிவு செய்யும் அதே சின்னத்தை வேறும் மாவட்டமொன்றில் மற்றுமோரு குழு தெரிவு செய்து போட்டியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றையே தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....