11 15
இலங்கைசெய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

Share

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.

இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...