3 28
இலங்கைசெய்திகள்

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

Share

பல பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வரி இலக்குகளை நோக்கி இலங்கை படிப்படியாக நகர்ந்து வருவதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரண்டா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,121 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

மேற்படி காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1025 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் 815 பில்லியன் ரூபாவும், மதுவரி திணைக்களம் 115 பில்லியன் ரூபாவும், ஏனைய நிறுவனங்களில் இருந்து 165 பில்லியன் ரூபாவும் வரிகளாக வசூலிக்கப்பட்டுள்ளன.

வரி வருவாய் இலக்குகளுக்குள் இலங்கை தொடர்ந்தும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய வங்குரோத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியுள்ளமைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

மேற்படி காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட வரி வருமானம் 2,005 பில்லியன் ரூபாவாகும். இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4,127 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 2,024 பில்லியன் ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், 1,533 பில்லியன் ரூபா சுங்கமும், 232 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களமும் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...