30 2
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

Share

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஜூலையில் வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 25,025 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 28,758 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2024 ஆகஸ்ட் 13 வரையான 7 மாதங்களில் 187,796 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இதில் 110,939 சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 76,857 பேர் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் சென்றவர்கள் என்றும், இவர்களில் அதிகளவிலானோர் குவைட்டில் தொழில் புரிவதாகவும், மேலும் 31,265 பேர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....