30 2
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

Share

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஜூலையில் வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 25,025 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 28,758 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2024 ஆகஸ்ட் 13 வரையான 7 மாதங்களில் 187,796 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இதில் 110,939 சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 76,857 பேர் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் சென்றவர்கள் என்றும், இவர்களில் அதிகளவிலானோர் குவைட்டில் தொழில் புரிவதாகவும், மேலும் 31,265 பேர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...