30 2
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

Share

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஜூலையில் வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 25,025 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 28,758 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2024 ஆகஸ்ட் 13 வரையான 7 மாதங்களில் 187,796 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இதில் 110,939 சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 76,857 பேர் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் சென்றவர்கள் என்றும், இவர்களில் அதிகளவிலானோர் குவைட்டில் தொழில் புரிவதாகவும், மேலும் 31,265 பேர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...

632482948 1401422515360507 8840792616751761572 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை! – கரன்தெனிய சுத்த பின்னணியில் உள்ளாரா? பொலிஸார் சந்தேகம்!

கொழும்பு – அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் இன்று (13) மாலை...