19 10
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்குள் நுழைவதற்கான விசாக்களை வழங்குவதற்கு குளோபல் நிறுவனத்தை நீக்கிவிட்டு பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பழைய முறைப்படி இணையவழி விசா வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்காத காரணத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயர் நீதிமன்ற உத்தரவுடன் இணையவழி முறைமை மூலம் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தே விசா பெற வேண்டும்.

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹராவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் வரும்போது, ​​விமான நிலையத்தில் வருகை விசா பெறுவதற்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...