10 13
இலங்கைசெய்திகள்

ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலமில்லை! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெருமிதம்

Share

ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலமில்லை! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெருமிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயல்படுவோரினால், அரசியல் ரீதியாக தலைதூக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு மக்கள் வருகை தருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அந்த நிலைமையே உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் குறைந்த அளவு வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இளம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களம் இறக்கியுள்ளதாகவும் அனைவரும் அவருடன் இணைந்து கொள்ள முடியும் என எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...