13 6
இலங்கைசெய்திகள்

அரச ஓய்வூதியர்களுக்கான விசேட இடைக்கால கொடுப்பனவு: குழப்பத்தில் அதிகாரிகள்

Share

அரச ஓய்வூதியர்களுக்கான விசேட இடைக்கால கொடுப்பனவு: குழப்பத்தில் அதிகாரிகள்

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊதிய முரண்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிசீலனையைத் தொடர்ந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக இடைக்கால கொடுப்பனவாக 5500 ரூபாவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, தேர்தல் காலத்தில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையத் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எனினும், அந்த வேலைத்திட்டங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்பதால், அவற்றை நிறுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தும் நிலையில் இல்லை என சமன் ஏக்கநாயக்க, தேர்தல் ஆணையத் தவிசாளரின் கடிதத்திற்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...