7 9
இலங்கைசெய்திகள்

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

Share

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடந்து தெரிவிக்கையில், ”ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில அரசியல் கட்சிகளில் இன்னும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.

அவர்களும் சிறுபான்மைக் கட்சி என்ற அடிப்படையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருமளவான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு மட்டுமல்லாது நாட்டு மக்களைக் குழப்பும் வகையிலான செயற்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...