13 3
இலங்கைசெய்திகள்

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

Share

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு சார்பு அல்லது பாகுபாடும் அற்ற சட்டத்தின் சமமான பாதுகாப்பை, அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தபட்டுள்ளது .
இதன்படி, தேர்தலுக்கு அமைவாக பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளால் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 0767914696 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112505566 தொலைநகல் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், தமது தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...