8 3
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

Share

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியில் இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் விவரம் கீழே,
01- பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்கா தேசிய அடையாள எண் – 951350753V

02- பெயர் – பதி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது சண்டி

தேசிய அடையாள அட்டை எண் – 199207801772

முகவரி – இல. 655/A மகும்புர, அஹுங்கல்ல

03- பெயர் – முத்துவடுர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது ஜெனி

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குற்றப்பிரிவு மேல் மாகாண தெற்கு – 072-4222223 நிலைய அதிகாரி, அதுரிகிரிய பொலிஸ் நிலையம் – 071-8591657 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...